சென்னை, ஏப். 15- மக்களின் வாழ்க்கையில் மொழிகள் சக்திமிக்க அம்சங்களாக விளங்குகின்றன. மொழிகளை மக்களை ஒன்றுபடுத்துவதற்கான சாதனங்களாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர ஒருபோதும் அவர்களைப் பிளவுபடுத்துவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்று ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகமது இன்று சென்னையில் கூறினார்.
சென்னை எழும்பூரில் தமிழ், சம்ஸ்கிருதம் மற்றும் இதர இந்திய மொழிகளுக்கான ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டிடத்தை அவர் இன்று மாலை திறந்து வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் "தன் மொழி மீது ஒருவருக்கு உள்ள பற்றுதல், சில சமயங்களில் குறுகிய வடிவைபெற்று ஒருவிதமான "வெறி"யையும் ஏற்படுத்திவிடுகிறது" என்றார். "பல்வேறு மொழிகளைப் பற்றி ஆராய்ச்சி மனப்பான்மையுடன் படிப்பதானது சகிப்புத் தன்மையை வளர்க்கும். சொந்த மொழியை மாத்திரமல்லாது பிற மொழிகளைப் பற்றியும் அறிய அது உதவும் என்று ராஷ்டிரபதி கூறினார்.
தமிழ் மொழியைப் பற்றி ராஷ்டிரபதி குறிப்பிடுகையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து செழித் தோங்கி வரும் உலக மொழிகளில் தனித்தன்மை வாய்ந்ததாக விளங்கி வருகிறது தமிழ் மொழி என்றார். அது பழமையான மொழியாக இருந்தாலும், தமிழ்மொழியானது, இன்றும் புத்தம் புதிய துடிப்புடனே விளங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கிய பாரம்பரியத்தின் ஆழமும், அளவும் அதன் பரந்த மனப்பான்மை, பொது நோக்குத் தன்மை ஆகியவற்றுக்கு ஈடாக உள்ளன. ...
சீனாவுக்கு இந்தியத் தூதர் நியமனம்
புது டில்லி, ஏப். 15- சீனாவுக்கு கே. ஆர். நாராயணன் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டுடன் சகஜ உறவை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியின் பகுதியாக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் இதை வெளி உறவு அமைச்சர் ஒய். பி. சவாண் அறிவித்த போது, அங்கத்தினர்கள் கைத் தட்டி வரவேற்றனர். தூதர் அளவில் ராஜதந்திர உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது என்று அரசு முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார். எல்லா நாடுகளுடனும், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை விருத்தி செய்து கொள்வது என்ற இந்தியாவின் கொள்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக வும் கூறினார்.
Summary
April 16, 1976: Language Must Not Be Used as a Tool to Divide the People — Rashtrapati's Address in Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

15.4.1976: வள்ளுவர் கோட்டம்: இன்று ராஷ்டிரபதி திறந்து வைக்கிறார்

2.4.1976: சென்னை நகருக்கு கோடைகால குடிநீர்

19.3.1976: தமிழ்நாடு சார்பில் சட்டங்களை இயற்ற ராஷ்டிரபதிக்கு அதிகாரம்

9.3.1976: த.நா.வில் ராஷ்டிரபதி ஆட்சி அமலுக்கு ராஜ்யசபை அங்கீகாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


