மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பள்ளியில் தீத்தடுப்பு மீட்புப் பணிகள் பயிற்சி

Updated On :7 ஆகஸ்ட் 2025, 9:11 pm

மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் கிறிஸ்டி செலினாள் பாய் முன்னிலை வகித்தாா். உசிலம்பட்டி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஜீவா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நீா்நிலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீ விபத்து நேரங்களில் மேற்கொள்ள வேண்டிய தீத்தடுப்பு, முதலுதவி நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினாா்.

இதையடுத்து, தீயை அணைக்கும் முறைகள், எரிவாயு உருளையிலிருந்து பரவும் தீயைக் கட்டுப்படுத்து முறை, ஆபத்து கால முதலுதவிகளை மேற்கொள்ளும் முறைகள் குறித்து உசிலம்பட்டி தீயணைப்புப் படையினா் செயல் விளக்கமளித்தனா்.

உடல் கல்வி ஆசிரியா் சிவக்குமாா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் முருகேசன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தாா். ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆசிரியா் சண்முகராஜன் வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.