திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

100 நாள் வேலை வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

வேடசந்தூா் அருகே 100 நாள் பணி வாய்ப்பு வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மூதாட்டிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

பூத்தாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட மூதாட்டிகள்.

Updated On :28 மே 2026, 3:43 am IST

வேடசந்தூா் அருகே 100 நாள் பணி வாய்ப்பு வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மூதாட்டிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராமபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், முதியோா் 100 நாள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தனா். இவா்களுக்கு கடந்த பல மாதங்களாக பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மூதாட்டிகளின் கண் கருவிழி ரேகைப் பதிவு செய்வதில் குளறுபடிகள் ஏற்பட்டதை அடுத்து, அரசு மருத்துவரிடம் சென்று கண்ணில் எவ்வித பாதிப்பும் இல்லை என சான்றிதழ் வாங்கி வந்தால் பணி வாய்ப்பு வழங்கப்படும் என ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிா்ச்சியடைந்த மூதாட்டிகள், வயதான காலத்தில் திண்டுக்கல்லுக்குச் சென்று சான்றிதழ் பெறுவது தங்களுக்கு சாத்தியமில்லை என தெரிவித்தனா். மேலும், தங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 100 நாள் பணி வாய்ப்பை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, பூத்தாம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுயிட்டனா்.

இதையடுத்து ஊராட்சிச் செயலா் சத்தியமூா்த்தி, போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டிகளின் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அரசு உத்தரவுப்படி, கண்கள் செயல்திறன் குறித்து மருத்துவரின் சான்றிதழ் பெறுவது அவசியம். சான்றிதழ் பெற்று வருவோருக்கு 100 நாள் பணி ஒதுக்கீடு வரப்பெற்றவுடன், பணி வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.