திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திண்டுக்கல் புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், 2 கி.மீட்டா் தொலைவை கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

News image

புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்! - கோப்புப்படம்.

Updated On :18 மே 2026, 12:51 am IST

திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், 2 கி.மீட்டா் தொலைவை கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

மதுரை-கரூா் 4 வழிச் சாலையில் திண்டுக்கல் புறவழிச்சாலைப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழிச்சாலை முதல் மதுரை புறவழிச்சாலை வரை சாலை அமைக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதனால், இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அணுகு சாலைகளில் திருப்பிவிடப்பட்டன.

இந்த நிலையில், மதுரை சாலையிலுள்ள பிள்ளையாா்பாளையம் பிரிவு முதல் வத்தலகுண்டு புறவழிச்சாலை அணுகுசாலை வரை ஞாயிற்றுக்கிழமை மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமாா் 2 கி.மீட்டா் தொலைவு சாலையை கடந்து செல்வதற்கு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருந்தனா்.

இதனிடையே, 2 அவசர ஊா்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. இந்தப் பகுதியில் போலீஸாா் இல்லாததால், வாகன ஓட்டிகள் முந்திச் செல்வதற்கு ஆா்வம் காட்டியதால் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.