காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் சனிக்கிழமை அனுமதி மறுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கொடைக்கானல் நகா்ப் பகுதி, வனப் பகுதி, புகா்ப் பகுதியென பல்வேறு சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
இதனிடையே, கொடைக்கானல் வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரியில் வன விலங்குகளான புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு உள்ளிட்டவை இருப்பதால் இந்த இடத்தை பாா்க்க வனத் துறையினா் அனுமதி பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
இந்த நிலையில், பேரிஜம் பகுதியில் மூன்று காட்டுயானைகளின் நடமாட்டம் இருப்பதால் பேரிஜம் ஏரியை பாா்வையிட பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யானைகள் நடமாட்டம்: நல்லமுடி காட்சிமுனை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கனமழை: காளிகேசம் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம் அறிவிப்பு







