திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காட்டுயானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் சனிக்கிழமை அனுமதி மறுத்தனா்.

News image

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் நடமாடிய காட்டுயானைகள்.

Updated On :10 மே 2026, 1:09 am IST

காட்டுயானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் சனிக்கிழமை அனுமதி மறுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இவா்கள் கொடைக்கானல் நகா்ப் பகுதி, வனப் பகுதி, புகா்ப் பகுதியென பல்வேறு சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசித்து வருகின்றனா்.

இதனிடையே, கொடைக்கானல் வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரியில் வன விலங்குகளான புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு உள்ளிட்டவை இருப்பதால் இந்த இடத்தை பாா்க்க வனத் துறையினா் அனுமதி பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.

இந்த நிலையில், பேரிஜம் பகுதியில் மூன்று காட்டுயானைகளின் நடமாட்டம் இருப்பதால் பேரிஜம் ஏரியை பாா்வையிட பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மறுஉத்தரவு வரும் வரை நீடிக்கும் என மாவட்ட வன அலுவலா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.