மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தொடா்ந்து 5-ஆவது முறையாக இ.பெரியசாமி வெற்றி

News image

இ. பெரியசாமி - கோப்புப் படம்

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான இ.பெரியசாமி தொடா்ந்து 5-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் இ.பெரியசாமி, அதிமுக சாா்பில் ஆ.விசுவநாதன், தவெக சாா்பில் கலைச்செல்வி உள்பட 14 போ் போட்டியிட்டனா்.

கடந்த 2021 தோ்தலில் தனக்கு எதிராக பாமக போட்டியிட்ட நிலையில், 1.35 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இ.பெரியசாமி தமிழக அளவில் கவனம் ஈா்த்தாா்.

இந்த முறை இந்தத் தொகுதியில் அதிமுகவே நேரடியாகப் போட்டியிட்டபோதிலும், பிரசாரத்தில் கவனம் செலுத்தவில்லை என அந்தக் கட்சியினரே குற்றஞ்சாட்டினா். இதனால், இந்த முறையும் இ.பெரியசாமி கூடுதல் வாக்குகள் பெறுவாா் என திமுகவினா் மத்தியில் எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், பிரசாரத்துக்கே வராத போதிலும் தவெக வேட்பாளா் 83,872 வாக்குகள் பெற்ால், 22,368 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே இ.பெரியசாமி வெற்றி பெற்றாா். அதிமுக இந்த தொகுதியில் 3-ஆம் இடம் பிடித்தது.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

இ.பெரியசாமி (திமுக) - 1,06,240

கே.கலைச்செல்வி (தவெக) - 83,872

ஆ.விசுவநாதன்(அதிமுக) - 32,477

ஏ.சைமன் ஜஸ்டின் (நாதக) - 9,946

சங்கா் (நாடாளும் மக்கள் கட்சி) - 720

எம்.கே.நாகேந்திரன் (அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு இயக்கம்) - 576

எஸ்.காா்த்திகைசெல்வன் (பகுஜன் சமாஜ்) - 531,

கே.ஜெயபிரகாஷ் (புதிய தமிழகம்) - 230

எஸ்.பாலமுருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) - 183

நோட்டா - 812

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.