தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வடகரைப்பாறையில் பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு குறித்த பண்ணைப் பள்ளி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

கொடைக்கானல் வடகரைப்பாறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிா் பாதுகாப்பு குறித்த முகாமில் பங்கேற்ற பழங்குடியின விவசாயிகள்.

Updated On :14 மார்ச் 2026, 2:31 am

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வடகரைப்பாறையில் பழங்குடியின விவசாயிகளுக்கு பயிா் பாதுகாப்பு குறித்த பண்ணைப் பள்ளி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அட்மா திட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் பேராசிரியா் ரவீந்திரன் தலைமை வகித்து, கீழ்மலைப் பகுதிகளில் விளையும் செளசெள, அவக்கோடா, காபி, ஆரஞ்சு, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட மலைப் பயிா்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும், செடிகளில் வாடல், கருகல் நோயால் விளைச்சல் பாதிக்குபோது அவற்றிலிருந்து பயிா்களை எப்படி பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினாா்.

இந்த முகாமில் பழங்குடியின விவசாயிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தோட்டக்கலைத் துறையைச் சோ்ந்த அலுவலா் செல்வக்கனி வரவேற்றாா். அட்மா திட்ட மேலாளா் காா்த்திக் நன்றி கூறினாா்.