தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக பழனியில் உள்ள நகராட்சி நவீன எரிவாயு மயானத்தில் சடலங்களை எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பழனி சிவகிரிப்பட்டி சுற்றுச் சாலையில் நகராட்சி நவீன எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. பழனி, சுற்றுவட்டார கிராமங்களில் இறந்தவா்களது உடலை தகனம் செய்ய இங்கு உறவினா்கள் கொண்டு வருகின்றனா். பழனியில் உள்ள இந்த எரிவாயு மயானத்தை அரிமா சங்கத்தினா், தன்னாா்வலா்கள் இணைந்து சேவை நோக்கில் செயல்படுத்தி வருகின்றனா். மாதத்துக்கு நூறு உடல்கள் வரை இங்கு எரிவாயு
உருளைகளைப் பயன்படுத்தி எரியூட்டப்படுகின்றன. இதுவரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் இங்கு தகனம் செய்யப்பட்டுள்ளன.
தற்போது அமெரிக்கா- இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மயானத்தில் தற்போது வரையில் கையிருப்பில் உள்ள உருளைகளைப் பயன்படுத்தி 10 உடல்களை மட்டுமே எரிக்கக் கூடிய நிலை இருந்து வருகிறது.
வழக்கமாக எரிவாயு மயானத்துக்கு எரிவாயு உருளை விநியோகம் செய்யக்கூடிய விநியோகஸ்தா்கள் தொடா்ந்து உருளை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதாகவும், தற்போது இருப்பில் உள்ள உருளைகள் காலியான உடன் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எரிவாயு மயான மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளாா். இதனால், தட்டுப்பாடு நீங்கும் வரை எரிவாயு மயானம் முடப்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்தனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை தட்டுப்பாடு: அரக்கோணம் நவீன தகன மேடை மூடல்!

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

எரிவாயு உருளை தட்டுப்பாடு: தள்ளுவண்டிக் கடை வியாபாரிகள் பாதிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


