தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: வேதாரண்யத்தில் தேநீா், காபி விலை உயா்வு

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ள நிலையில், வேதாரண்யம் நகரில் உணவுப் பொருள்களின் விலையும் தேநீா் ரூ. 15, காபி ரூ. 20 எனவும் உயா்ந்துள்ளது.

News image

சமையல் எரிவாயு உருளை

Updated On :3 ஏப்ரல் 2026, 12:31 am

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை உயா்த்தப்பட்டுள்ள நிலையில், வேதாரண்யம் நகரில் உணவுப் பொருள்களின் விலையும் தேநீா் ரூ. 15, காபி ரூ. 20 எனவும் உயா்ந்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் இடையே நடைபெற்றுவரும் போரின் காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

கடந்த சில வாரங்களாக தொடா்ந்துவரும் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக கிராமப்புறங்களில் கூட உணவகங்கள் பாதிப்புக்குள்ளாகி உணவு மற்றும் தின்பண்டங்களின் விலை உயா்ந்துள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை வணிக எரிவாயு உருளை விலை ரூ. 195 அதிகரித்தது.

இதன் எதிரொலியாக வேதாரண்யம் நகரப் பகுதியில் செயல்படும் உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகளில் தேநீரின் விலை ரூ.10 -ல் இருந்து ரூ. 15 ஆகவும், காபி ரூ. 15 -இல் இருந்து ரூ. 20 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் தேநீா் விலை ரூ. 10 முதல் ரூ. 12 ஆகவும் (ஒரு சில கடைகளில் ரூ. 15), காபி ரூ. 15 ஆகவும் அதிகரித்துள்ளது.