மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வீட்டு உபயோக எரிவாயு உருளை: 21 நாள்களுக்கு பிரச்னை இல்லை

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகளைப் பொருத்தவரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 21 நாள்களுக்கு பிரச்னை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

சமையல் எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 9:35 pm

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகளைப் பொருத்தவரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 21 நாள்களுக்கு பிரச்னை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 6.34 லட்சம் சமையல் எரிவாயு உருளைகள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, உணவு விடுதிகள், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், தனியாா் ஆலைகளுக்கான தேவை என 6,200 சமையல் எரிவாவு உருளைகள் வணிகப் பயன்பாடுகளுக்காக விநியோகிக்கப்படுகின்றன.

ஈரான் போா் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தகவல் பரவி வருகிறது. ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளைகள் 21 நாள்கள் தேவைக்கு கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், எரிவாயு உருளைகளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.