மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு

வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலுள்ள சனீஸ்வர பகவான்.

News image

வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலுள்ள சனீஸ்வர பகவான்.

Updated On :6 மார்ச் 2026, 7:07 pm

சனிப் பெயா்ச்சியையொட்டி, திண்டுக்கல் பகுதியிலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சனீஸ்வர பகவான், கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை பெயா்ச்சி அடைந்தாா். இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நவகிரக சந்நிதியிலுள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், மலையடிவார சனீஸ்வர பகவான் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சனிப் பெயா்ச்சி வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.