தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹாக்கி போட்டியில் பதக்கம்: மாணவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்டோா் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவித்த புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :4 மார்ச் 2026, 11:33 pm

மாநில அளவிலான ஹாக்கிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

குடியரசுத் தின பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகளில் 14 வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கிப் போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 3-ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனா்.

இதேபோல, 19 வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்துப் போட்டியில் 4-ஆவது இடம் பிடித்தனா்.

மாநில அளவிலான போட்டிகளில் சாதித்த இந்த மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ். மரியநாதன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் ஸ்டீபன் லூா்து பிரகாசம் முன்னிலை வகித்தாா். ஹாக்கி, கால்பந்து வீரா்கள் அனைவருக்கும் தலா ரூ. 5ஆயிரம் வீதம் 16 வகையானப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியா்கள் தெரஸ்நாதன், மரிய தேன் அமிா்தம், உடற்கல்வி ஆசிரியா்கள் டேமியான், பீட்டா் உள்ளிட்டோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.