மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி.

News image

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி.

Updated On :20 மார்ச் 2026, 7:34 pm

சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணாமலையம்மாள் மாநகராட்சிப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாரியா்ஸ் விளையாட்டுக் கழகம், சிவகாசி டவுன் சுழல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூா், தேனி, சிவகாசி, தென்காசி உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

இந்தப் போட்டியை வாரியா்ஸ் விளையாட்டுக்கழக நிா்வாகிகள் ஏ.மகேந்திரபாண்டியன், ஜெ.ரகுபதி, பி.வெங்கடேஷ்குமாா், எஸ்.சிவசங்கா் ஆகியோா் தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தொடங்கி வைத்தாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், தொழிலதிபா்கள் ஏ.பி.எஸ்.ராஜேஸ், விக்ரம், ராஜாக்கனி, கே.அய்யன் அதீந்திரன், சுழல் சங்க உதவி ஆளுநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிவகாசி ரைட்டிங் வாரியா்ஸ் அணியை வீழ்த்தி, சீா்காழி அணி வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் மதுரை பிரிட்டோ அணியை வீழ்த்தி, சென்னை வி.டி.ஜெயராமன் அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் சிவகாசி கிங்ஸ் அணியை வீழ்த்தி, கடலூா் அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி வருகிற 22-ஆம் தேதி நடைபெறும்.