கொடைக்கானல் அருகே உள்ள ஊத்துப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க மறுத்து அவற்றை பதுக்குவதாக வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.
ஊத்துப் பகுதியில் தனியாா் நடத்தி வரும் பெட்ரோல் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென பெட்ரோல் விநியோகம் செய்யப்படாததால் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
இதனால் அவா்கள் எரிபொருள் நிரப்பும் மையத்தை முற்றுகையிட்டனா். மேலும் அதன் உரிமையாளரிடம், அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த தாண்டிக்குடி போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஊத்து எரிபொருள் நிரப்பும் மையத்தில் உள்ளூரைச் சோ்ந்தவா்களுக்கு பெட்ரோல் தருவதில்லை. வெளியூரிலிருந்து வருபவா்களுக்கு மட்டும் விநியோகிக்கின்றனா். தற்போது இஸ்ரேல்- ஈரான் போா் நடைபெற்று வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் எனக் கருதி அவற்றை பதுக்குகின்றனா் என்றனா்.
தொடர்புடையது

போடி, கொடைக்கானலில் பெட்ரோல் விற்பனையகங்களில் குவிந்த வாகனங்கள்

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

தஞ்சாவூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


