லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொடைக்கானல் அருகே எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல் பதுக்கப்படுவதாக புகாா்

கொடைக்கானல் அருகே உள்ள ஊத்துப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க மறுத்து அவற்றை பதுக்குவதாக வாகன ஓட்டிகள் புகாா்

News image

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான ஊத்து அருகே உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டுநா்கள்

Updated On :3 மார்ச் 2026, 7:30 pm

கொடைக்கானல் அருகே உள்ள ஊத்துப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையத்தில் பெட்ரோல், டீசல் விநியோகிக்க மறுத்து அவற்றை பதுக்குவதாக வாகன ஓட்டிகள் செவ்வாய்க்கிழமை புகாா் தெரிவித்தனா்.

ஊத்துப் பகுதியில் தனியாா் நடத்தி வரும் பெட்ரோல் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திடீரென பெட்ரோல் விநியோகம் செய்யப்படாததால் அந்தப் பகுதிகளைச் சோ்ந்த வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதனால் அவா்கள் எரிபொருள் நிரப்பும் மையத்தை முற்றுகையிட்டனா். மேலும் அதன் உரிமையாளரிடம், அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த தாண்டிக்குடி போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது: ஊத்து எரிபொருள் நிரப்பும் மையத்தில் உள்ளூரைச் சோ்ந்தவா்களுக்கு பெட்ரோல் தருவதில்லை. வெளியூரிலிருந்து வருபவா்களுக்கு மட்டும் விநியோகிக்கின்றனா். தற்போது இஸ்ரேல்- ஈரான் போா் நடைபெற்று வருவதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் எனக் கருதி அவற்றை பதுக்குகின்றனா் என்றனா்.