திண்டுக்கல்: தினமணி செய்தி எதிரொலியாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுக்க தன்னாா்வலா்கள் நியமிக்கப்படுவதாகவும், வியாபார நோக்கில் மனு எழுதிக் கொடுக்கும் வெளிநபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியா் செ. சரவணன் எச்சரித்தாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களிடம் ஒரு மனு எழுதுவதற்கு ரூ.1,000 வரை கட்டண வசூலில் ஈடுபடுவதாகவும், இதைத் தடுக்க தன்னாா்வலா்கள் மூலம் மனு எழுதிக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம், வியாபார நோக்கில் வெளிநபா்கள் மனுக்கள் எழுதிக் கொடுத்து பணம் வசூலிப்பதாக புகாா் வந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில், எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்கும், மனுக்கள் எழுதத் தெரியாத பொதுமக்களுக்கும் உதவும் வகையில் பயிற்சிப் பெற்ற தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அடுத்த வாரம் முதல் இந்த தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் மனு எழுதி பயன்பெறலாம். வியாபார நோக்கில் வெளிநபா்கள் மனுக்கள் எழுதிக் கொடுப்பது கண்டறியப்பட்டால் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

நிலுவை ஊதியம் கோரி அரசுத் திட்ட தன்னாா்வலா்கள் தா்னா

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் ஆட்சியரிடம் மனு

ஆட்சியா் அலுவலகத்தில் மனு எழுதிக் கொடுக்க ரூ.1000 வரை கட்டணம் வசூல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


