டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை!

நிலத் தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
ஆயுள் சிறை
Updated On :29 ஜனவரி 2026, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

நிலத் தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்த கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு நிலத் தகராறின் போது ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், மணிகண்டனின் உறவினரான திருப்பதி (56), சவடமுத்து (26), முனீஸ்வரன் (25), புகழேந்தி (46) ஆகியோரை வடமதுரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. முத்துசாரதா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், திருப்பதி, சவடமுத்து, முனீஸ்வரன், புகழேந்தி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.