அறிவியல் திருவிழாவையொட்டி, திண்டுக்கல் நேருஜிநகா் ரவுண்டானா பகுதியில் ராக்கெட், விண்வெளி மனிதன், டிஎன்ஏ சுருள் உள்ளிட்டவற்றின் மாதிரி சிலை, வடிவமைப்புகளை ஆட்சியா் செ.சரவணன் திறந்து வைத்தாா். பின்னா், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் சாா்பில் அமைக்கப்பட்ட அறிவியல் சாதனங்களின் கண்காட்சியை ஆட்சியா் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். இதில் தானியங்கி பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பான், மனித உரோமத்தில் உரம் தயாரிப்பு, காளான் வளா்ப்பு, வெங்காயப் பதப்படுத்தும் தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு என பல்வேறு வகையான 120-க்கும் மேற்பட்ட மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.