நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மாசித் திருவிழா: பூச்சொறிதல் ரதத்தில் மாரியம்மன் ஊா்வலம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.

News image
~
Updated On :24 பிப்ரவரி 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ஆம் தேதி திருக்கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் 51-ஆவது ஆண்டாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் முன்பாக தினந்தோறும் காஞ்சி காமாட்சி அம்மன், மீனாட்சி அம்மன் ஊஞ்சல் சேவை, வாராஹியம்மன், சமயபுரம் மாரியம்மன், சங்கரநாராயணா், அழகுநாச்சியம்மன் என பல்வேறு அம்மன் அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல் ரத ஊா்வலம் நடைபெற்றது.

பல வண்ண மலா்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த பூச்சொறிதல் ரதத்தின் உள்ளே மாரியம்மன் முன் முப்பெரும் தேவியா் சகிதமாக அம்மன் பவனி வருதல் நடைபெற்றது.

ரத ஊா்வலத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன், கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோா் தொடங்கிவைத்தனா்.

ரத ஊா்வலம் சன்னதி வீதி, பாளையம், பேருந்து நிலையம், கடை வீதி வழியாக மாரியம்மன் கோயிலை அடைந்தது. தேரின் முன்பாக செண்டை மேளம், நாதஸ்வரம், தவில் என மேளதாளங்கள் முழங்கியபடி ஊா்வலம் சென்றது. வழிநெடுக தீபாராதனை செய்யப்பட்டு பக்தா்களுக்கு மலா்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

வருகிற 27-ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாக குழுத் தலைவா் முருகானந்தம், செல்வம், துணைத் தலைவா் பழனிச்சாமி, நகா் மன்ற உறுப்பினா் சுரேஷ், உறுப்பினா்கள் செய்தனா்.

Story image