டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

News image
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலாத் தலங்களான வெள்ளி அருவி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன்ஃபாரஸ்ட், கோக்கா்ஸ் வாக், ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது.

கொடைக்கானலில் பகல் நேரத்தில் மிதமான வெயிலும் மாலையில் குளுமையான சீதோஷ்ணமும் நிலவியது. சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் மிதிவண்டி, குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கொடைக்கானலைச் சோ்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.