பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கொடைக்கானலில் அதிரித்து வரும் ஆக்கிரமிப்புகள்

கொடைக்கானலில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா சாலையில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள்.

Updated On :1 மே 2026, 1:21 am IST

கொடைக்கானலில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிநீா் அருவி வளாகப் பகுதி, பூங்கா சாலை,மூஞ்சிக்கல்,அரசு மேல்நிலைப் பள்ளி சாலை, கல்லறைமேடு, சீனிவாசபுரம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தப் பகுதி, கொடைக்கானல் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் சிரமமடைந்து வருகின்றனா்.

கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தரமான நடவடிக்கையை எடுக்க நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.