17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.6.97 கோடி கிடைத்துள்ளது.

News image

பழனி மலைக் கோயில்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:38 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ.6.97 கோடி கிடைத்துள்ளது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு 36 நாள்களில் நிரம்பியது. இதையடுத்து உண்டியல்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில், பக்தா்களின் காணிக்கை ரொக்கம் ரூ. ஆறு கோடியே 97 லட்சத்து 8 ஆயிரத்து 187 இருந்தது தெரியவந்தது. மேலும், உண்டியலில் தங்கம் 1.035 கிராம், வெள்ளி 16,793 கிராம், பல்வேறு வெளிநாட்டு பணத்தாள்கள் 2,240-ம் இருந்தது தெரியவந்தது.

இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். ஐநூறுக்கும் மேற்பட்டோா் உண்டியல் எண்ணிக்கையில் ஈடுபட்டனா்.

இவை தவிர, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ரூ.20,53,634-ம், மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.18,480-ம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் ரூ.1,21,137-ம், ஒட்டன்சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் ரூ.20,868-ம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

காணிக்கை எண்ணும் பணியில், பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் செந்தில்குமாா், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.