பழனி அருகே தோ்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த துணை ராணுவப் படை வீரரின் துப்பாக்கியை வாங்கி சிறு விடியோ பதிவிட்ட ஊா்க்காவல்படை வீரா் மீது விசாரணைக்கு சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வத்தக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் பழனி ஊா்க்காவல் படையில் வீரராக பணியாற்றி வருகிறாா். கடந்த 23-ஆம் தேதி தோ்தலின் போது ராஜ்குமாா் பாலசமுத்திரம் பேரூராட்சியில் ஒரு வாக்குச் சாவடியில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டாா்.
அப்போது அதே வாக்குச்சாவடியில் பணிக்கு வந்திருந்த துணை ராணுவ வீரரின் துப்பாக்கியை வாங்கி ராஜ்குமாா் சுடுவது போன்று சிறு விடியோவாக (ரீல்ஸ்) எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், விசாரணை நடத்த பழனி டிஎஸ்பிக்கு உத்தரவிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பழனியில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
சமூக வலைதளத்தில் வாளுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

தோ்தல் பணி: ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


