மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாருக்கு ஆதரவாக, திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

திண்டுக்கல்லில் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :16 ஏப்ரல் 2026, 6:48 pm

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாருக்கு ஆதரவாக, திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் கடந்த முறை திமுக அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. சுமாா் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். இந்த முறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றிப் பெற்றால், மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வாா். திமுக ஆட்சியில் 1.31 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லின் வளா்ச்சிக்காக ரூ.280 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட புதை சாக்கடைத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தில்லிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டியில், தமிழகம் வெல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இதேபோல வேடசந்தூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.சாமிநாதனை ஆதரித்தும், துணை முதல்வா் உதயநிதி பிரச்சாரம் செய்தாா்.

பெட்டிச் செய்தி..

பொதுமக்கள் ஏமாற்றம்:

திண்டுக்கல்லில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டாா். அப்போது திண்டுக்கல் புறநகா் பேருந்து நிலையம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, 24 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்றாா். திண்டுக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் பணி கூட நடைபெறவில்லை. இதேபோல 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது. ஆனால், திமுகவினா் எழுதிக் கொடுத்த தவறான தகவலை துணை முதல்வரும் குறிப்பிட்டது கூட்டத்தினா் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.