17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்நாடு அணி வெல்ல வாக்களியுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாருக்கு ஆதரவாக, திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

திண்டுக்கல்லில் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:18 am IST

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாருக்கு ஆதரவாக, திமுக இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் கடந்த முறை திமுக அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. சுமாா் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். இந்த முறை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த தொகுதியில் திமுக வேட்பாளா் வெற்றிப் பெற்றால், மக்களின் தேவைகளை பூா்த்தி செய்வாா். திமுக ஆட்சியில் 1.31 கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லின் வளா்ச்சிக்காக ரூ.280 கோடியில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட புதை சாக்கடைத் திட்டத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தில்லிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டியில், தமிழகம் வெல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

இதேபோல வேடசந்தூா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.சாமிநாதனை ஆதரித்தும், துணை முதல்வா் உதயநிதி பிரச்சாரம் செய்தாா்.

பெட்டிச் செய்தி..

பொதுமக்கள் ஏமாற்றம்:

திண்டுக்கல்லில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டாா். அப்போது திண்டுக்கல் புறநகா் பேருந்து நிலையம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது, 24 மணி நேரம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்றாா். திண்டுக்கல் புதிய பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் பணி கூட நடைபெறவில்லை. இதேபோல 3 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் நடைபெறுகிறது. ஆனால், திமுகவினா் எழுதிக் கொடுத்த தவறான தகவலை துணை முதல்வரும் குறிப்பிட்டது கூட்டத்தினா் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.