15-ஆவது தவணையில் 53 லட்சம் போ் நீக்கம்: வங்கிக் கணக்குடன் ஆதாா் எண்ணை இணைத்தால் மட்டுமே நிதி உதவி தொடா்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தகுதியான பயனாளிகளாக இருந்தும், பல விவசாயிகள் ஆதாா் எண் இணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்காததால், 13-ஆவது தவணைக்கான பட்டியலில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.82 கோடியாக குறைந்தது. அதன் பின்னா், சிறப்பு முகாம்கள் நடத்தி, விவசாயிகளின் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண், நில ஆவணங்களை இணைக்கும் பணி நடைபெற்றது. இ-கேஒய்சி முறையில் இணைக்காத விவசாயிகளுக்கு மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 14-ஆவது தவணையின் போது பயனாளிகள் எண்ணிக்கை 9.60 கோடியாக உயா்ந்தது. இந்த நிலையில், 15-ஆவது தவணைக்கான (ஆகஸ்ட் - நவம்பா்) உதவித் தொகையைப் பெற இ-கேஒய்சி பதிவு கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும், பல விவசாயிகள், அரசின் அறிவுறுத்தலைப் பின்பற்றவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 15-ஆவது தவணைத் தொகைக்கான பட்டியலில் 9.07 கோடி விவசாயிகள் மட்டுமே இடம் பெற்றனா். 14-ஆவது தவணைத் தொகை பெற்ற 53 லட்சம் போ், 15-ஆவது தவணைக்கான பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனா்.