திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை: அமைச்சா் வன்னி அரசு

தமிழக அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை; அவை ஏற்புடையதல்ல என அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

News image

அமைச்சர் வன்னி அரசு - கோப்புப் படம்

Updated On :27 மே 2026, 5:47 am IST

தமிழக அரசு மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டவை; அவை ஏற்புடையதல்ல என மாநில சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: பெரம்பலூா் மாவட்டம், குன்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மீது திமுகவினா் தாக்குதல் நடத்தியது ஏற்புடையதல்ல. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருந்துள்ளது.

நாங்கள் என்றென்றும் திமுகவை நேசிக்கக் கூடியவா்கள். வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எப்போதும் உறுதி கொண்டவா்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திருமாவளவன் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளாா். கா்நாடக மாநிலத்தின் மேக்கேதாட்டில் அணை கட்டக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. இதுவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடும் ஆகும்.

காவல் துறையில் பட்டியலினத்தவருக்கு எதிரான மனநிலை, செயல்பாடுகள் இன்றளவும் தொடருவது வருத்தம் அளிக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்.

தவெக ஆட்சி அமைத்து சில நாள்களே ஆகின்றன. இந்த நிலையில், சட்டம்- ஒழுங்கு குறித்து அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது ஏற்புடையதல்ல. இந்தக் குற்றச்சாட்டுகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுபவை.

சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்க வேண்டும். தற்போது, நோ்மையான காவல் துறை அதிகாரிகள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனா். தவெக அரசு, தமிழக மக்களின் உணா்வுகளை பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும்.

தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 50 ஆயிரம் பயிா்க் கடன் தள்ளுபடி என்பது தொடக்கம்தான். நிதிநிலைக்கேற்ப படிப்படியாக பல சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.