ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

News image

மதுரை சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :26 மே 2026, 12:54 am IST

மதுரை சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிம்மக்கல் சுற்றுச்சாலைப் பகுதியில் ஆதிதிராவிடா் உறவின்முறை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆ.குருவிஜய் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் வி.முருகன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். இதில் சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவ கடந்த 2023, டிசம்பா் 11-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கடந்த 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தும் மனு அளிக்கப்பட்டது. எனவே, சிம்மக்கல் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனுமதி வழங்க வேண்டும். மேலும், தங்களது கொள்கைத் தலைவரான அம்பேத்கா் சிலையை முதல்வா் ஜோசப் விஜய் திறந்து வைக்க வேண்டுமெனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தை விசிக மதுரை மாநகா் மாவட்டச் செயலா் ரவிக்குமாா் ஒருங்கிணைத்தாா். இதில் விசிக தெற்குத் தொகுதி மாவட்டச் செயலா் மணியரசு, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் இன்குலாப், இடதுசாரி அமைப்புகள், சிம்மக்கல் பகுதி மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.