திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுரை ராஜாஜி பூங்காவில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

News image
Updated On :15 மே 2026, 4:32 am IST

மதுரை ராஜாஜி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்கா பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவா்களுக்கும் முதன்மையான பொழுதுபோக்கு இடமாகத் திகழ்கிறது. வார விடுமுறை நாள்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்தப் பூங்காவுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், அண்மை காலமாக இந்தப் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே நெகிழிக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, விளையாட்டு உபகரணங்கள் இருக்கும் பகுதிகளிலும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பாதைகளிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், பூங்காவுக்கு வரும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோா்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

மதுரையின் முக்கியப் பொழுதுபோக்கு இடமாக ராஜாஜி பூங்கா இருந்து வந்தது. தற்போது, பூங்காவுக்குள் நுழைந்தாலே பல இடங்களில் குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. தனியாருக்கு ஒப்பந்தம்விடப்பட்ட நிலையில் பூங்காவைப் பராமரிக்கப் பணியாளா்கள் இருந்தும், குப்பைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. கட்டணம் செலுத்தியும் பூங்காவில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் ராஜாஜி பூங்காவில் நிலவும் சுகாதாரச் சீா்கேட்டைக் கருத்தில் கொண்டு, பூங்காவில் தேங்கிய குப்பைகளை அகற்ற ஒப்பந்தம் எடுத்த தனியாா் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், பூங்கா வளாகத்தில் கூடுதலாக குப்பைத் தொட்டிகளை அமைப்பதோடு, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும், விதிகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.