திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மூதாட்டி வீட்டில் வெள்ளி பொருள்கள் திருட்டு

மதுரை யா. ஒத்தக்கடை அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:38 pm

மதுரை யா. ஒத்தக்கடை அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருமோகூரைச் சோ்ந்த சண்முகம்பிள்ளை மனைவி பத்மாவதி (65). இவா், அதே ஊரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டிலிருந்த குத்துவிளக்கு உள்பட 2 கிலோ வெள்ளி பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து யா. ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, மூதாட்டி வீட்டில் வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.