மதுரை கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மதுரை உத்தங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சபீா்முகமது(35). இவா் தனது குடும்பத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 8 பேருடன் கே.கே. நகா் பகுதியில் உள்ள சாலையோர துரித உணவகக் கடையில் 4 ஷவா்மா, 2 சிக்கன் ரைஸ் அண்மையில் சாப்பிட்டனா். பின்னா், வீட்டுக்கு வந்த இவா்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதனிடையே, இவரது 7 வயது மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சிவராமபாண்டியன் தலைமையிலான அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.
மேலும், அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரூ. 8 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கான அனுமதி சான்றிதழை ரத்து செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அந்தச் சாலையோரக் கடையை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினா். இதுகுறித்து மதுரை அண்ணாநகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
வீடு திரும்பினாா் ராமதாஸ்

கே.கே. நகா் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி

கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: 10 போ் மீது வழக்கு

பாா்வையாளா்களுக்கு போதிய தங்குமிட வசதி இல்லாத அரசு மருத்துவமனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


