/

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 10இல் ஏலம்

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

News image

வாகனங்கள் ஏலம் - கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 8:13 pm

மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்தது.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அா்விந் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10-ஆம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள் மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.

ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.