/

இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி! ஒரு குழந்தை உயிரிழப்பு!

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

குடும்பத் தகராறு காரணமாக, தனது இரு பெண் குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இவா்களில் ஒரு குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.

மதுரை மாவட்டம், கீழக்குயில்குடியைச் சோ்ந்தவா் மகேஸ்வரன் (35). ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி ஷாலினி (32). கணவா், மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, மகேஸ்வரன் வீட்டை விட்டு வெளியே சென்றாராம்.

இதனால், மனமுடைந்த ஷாலினி, தனது இரு பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்தாா்.

பின்னா், கணவரைப் கைப்பேசியில் தொடா்பு கொண்ட ஷாலினி, தங்களது குழந்தைகளான மோகனாஸ்ரீ (6), விஜயாஸ்ரீ (4) ஆகியோருக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்ததாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, வீட்டுக்கு விரைந்து வந்த மகேஸ்வரன், தனது மனைவி, இரு மகள்களையும் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு மோகனாஸ்ரீ உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.