டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புனித லூா்து அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

News image
மதுரை கோ. புதூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புனித லூா்து அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை கோ. புதூா் புனித லூா்து அன்னை திருத்தலத்தின் 106-ஆவது ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருத்தலத்தின் ஆண்டுப் பெருவிழா வருகிற 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை உயா் மறைமாவட்ட முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமை வகித்து, பாரம்பரிய முறைப்படியான பூஜைகளை நடத்தினாா். பூஜைகளின் நிறைவில், இறைப் புகழ்ச்சி முழக்கங்களுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

பங்குத் தந்தை ஜாா்ஜ், உதவி பங்குத் தந்தையா்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்ளைச் சோ்ந்த திரளானோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, ஆண்டுப் பெருவிழா ஆடம்பரத் திருப்பலி நடைபெற்றது. முன்னாள் பேராயா் அந்தோணி பாப்புசாமி திருப்பலியை நிறைவேற்றினாா். ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான அலங்கார தோ்பவனி வருகிற 14-ஆம் தேதியும், பொங்கல் விழா வருகிற 15-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.