விருதுநகர் கல்லூரி விடுதி, அருப்புக்கோட்டை கல்லூரி விடுதி, மலைபட்டி, முஷ்டக்குறிச்சி, திருச்சுழி, கட்டாங்குடி, நரிக்குடி, முத்துராமலிங்காபுரம், புதுப்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட விடுதிகளில் போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் செயல்படுகின்றன. அரசு விதிமுறைப்படி 50 மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு விடுதியில் காப்பாளர்-1, சமையலர்-2, காவலர்-1 எனப் பணியாளர்கள் இருக்க வேண்டும். இந்த விடுதிகளில் போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மாணவ, மாணவிகளுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.