இது தவிர, மதுரையில் தூய மரியன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களும் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றுக்கும் நிரந்தரப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், போலீஸôர் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வழிபாட்டுத் தலங்களைத் தவிர்த்து, மக்கள் கூடும் இடங்களாகக் கருதப்படும் பஸ் நிலையப் பகுதிகள், ரயில் நிலையப் பகுதிகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றின் வரைபடத்துடன், அவற்றின் அமைப்பு, வாயில்கள் விவரத்தையும் போலீஸôர் சேகரித்து வருகின்றனர். சிறப்புப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மக்கள் கூடும் கோயில்கள் அனைத்திலும் மெட்டல் டிடெக்டர், கண்காணிப்பு காமிராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும். தனியார் நிறுவனங்களில் இந்த வசதியை அமைக்க அறிவுறுத்தப்படும் எனவும், போலீஸ் உயரதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து, மதுரை மாநகர் போலீஸ் நகர் உதவிக் கமிஷனர் வெள்ளத்துரையிடம் கேட்டபோது, புதிய திட்டத்துக்கான பரிந்துரைகள், கோயில் வரைபடம் உள்ளிட்டவற்றை சேகரித்து அனுப்பியுள்ளோம் என்றார். அநேகமாக, நவம்பரில் இந்த புதியத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, உயர் அதிகாரிகள் வட்டராங்கள் மேலும் தெரிவித்தன.