அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள், பிரதானக் குழாய், மோட்டார் பம்பு ஆகியவற்றை தாற்காலிகமாக சீரமைக்க ஆண்டுதோறும் நகராட்சி பல லட்சம் ரூபாய் செலவு செய்வதாக நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும், பழனிசெட்டிபட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. வீரப்ப அய்யனார் கோயில் குடிநீர் திட்டம், அரப்படித்தேவன்பட்டி குடிநீர் திட்ட உறை கிணறுகள் ஆகியவை மூலம் பம்பிங் செய்யப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல், மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் குளோரினேசன் செய்து குழாய்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், மழைக் காலங்களில் குடிநீர் மாசு கலந்து வருவதாக நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.