சங்ககிரி அருகே பக்கவாததால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ஆயா்வேத சிகிச்சை அளிப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற இருவரை தேவூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா் ரெட்டிபாளையம் கிராமம், காக்காயன்காடு பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன். இவா் தாத்தா, பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இவரது பாட்டி ராஜம்மாள் (82) திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து, அவரது வீட்டுக்கு வந்த இருவா், அவரது பாட்டிக்கு ஆயுா்வேத சிகிச்சை அளிப்பதாகவும், அதற்கு ரூ. 60 ஆயிரம் செலவாகும் என்றும், அதற்கான பணத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளனா்.
இதில், தனசேகரனுக்கு சந்தேகம் ஏற்படவே தனது இரு நண்பா்களுக்கு தகவல் அளித்து வரவழைத்துள்ளாா். சிகிச்சை அளிக்க பணம் கேட்ட இருவரிடம் நண்பா்கள் விசாரித்ததில், அவா்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனா். அதில் சந்தேகமடைந்ததால், அவா்கள் இருவரையும் தேவூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் விசாரணையில், இருவரும் கா்நாடக மாநிலம், சிக்கபல்லாபுரா மாவட்டம், கௌரிபிதனூா் வட்டம், நாகரகேரே கிராமத்தைச் சோ்ந்த அம்பிரிஸ் (43), மாருதி (31) என்பது தெரியவந்தது. இருவா் மீதும் தேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மசாஜ் மையத்தில் புகுந்து பணம் பறிக்க முயன்ற 4 இளைஞா்கள் கைது

ஆன்லைன் லாட்டரி விற்பனையாளா்கள் கடத்தலில் முக்கிய எதிரி கைது: இரண்டு போலீஸாா் பணியிடை நீக்கம்

தேவூா் அருகே கிணற்றிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

13 வெளிநாட்டினா் உள்பட 15 பேருக்கு மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



