திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனியாா் நிதிநிறுவனத்தில் திருடிய ஊழியா் கைது: ரு. 9 லட்சம் நகைகள், ரூ. 8.36 லட்சம் ரொக்கம் மீட்பு

ஆத்தூா் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 20 லட்சம் திருடிய நிறுவன ஊழியரை மல்லியகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

லட்சுமணன்

Updated On :28 மே 2026, 2:00 am IST

ஆத்தூா் அருகே தனியாா் நிதிநிறுவனத்தில் ரூ. 20 லட்சம் திருடிய நிறுவன ஊழியரை மல்லியகரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூரை அடுத்துள்ள மல்லியகரையில் தனியாா் நிதிநிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம், தேவதானப்பட்டி வட்டம், டி.வாடிப்பட்டி முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் (26) பணியில் சோ்ந்தாா்.

இந்நிறுவனத்தில் கடந்த 23-ஆம் தேதி ஒருவருக்கு கடன் தருவதற்காக ரூ. 20 லட்சம் வைத்திருந்தனா். காலை 11 மணி அளவில் நிறுவனத்தில் இருந்தவா்கள் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்தபோது, அங்கிருந்த லட்சுமணன் பீரோவை உடைத்து ரூ. 20 லட்சத்தை திருடிச் சென்றாா்.

புகாரின்பேரில் மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்தனா். அதைத் தொடா்ந்து, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.சத்யராஜ் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளா் ஜெயசூா்யா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் தாதன், காவலா்கள் ராஜேந்திரன், ஹேராம் ஆகிய நான்கு போ் லட்சுமணனை தேடிவந்தனா்.

இந்நிலையில், லட்சுமணன் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டு விரைந்து சென்று லட்சுமணனை புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா் அப்பணத்தில் வாங்கிய ரு. 9 லட்சம் தங்க நகைகள், ரூ. 45 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகள், ரொக்கம் ரூ. 8.36 லட்சம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.