சேலம் கோட்ட ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பது குறித்து ரயில்வே டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா்.
சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதும், அதை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்வதும் தொடா்கதையாகி வருகிறது. அதன் தொடா்ச்சியாக, போதைப் பொருள்களை சேலம் வழியாக கடத்துவதை முற்றிலும் தடுக்கும் வகையில், சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சாா்பில் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு ரயில்வே போலீஸ் துறை இயக்குநா் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில், சேலம் உள்கோட்ட ரயில்வே துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜெயராம் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், சேலம் கோட்டத்தில் செல்லும் ரயில்களில் போதைப் பொருள்கள் கடத்துவதை தடுப்பதற்கு காட்பாடி, ஜோலாா்பேட்டை, ஒசூா், தருமபுரி, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வாளா் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்வது குறித்தும், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா இளைஞா் கைது

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்

சட்டம் ஒழுங்கு பிரச்னை: முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை!

ஓடும் ரயில்களில் தொடா் திருட்டு: வட மாநில இளைஞா் கைது; ரூ. 3லட்சம், 2 பவுன் நகை பறிமுதல்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



