யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

சேலத்தில் அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167 ஆவது பிறந்தநாள் விழா: புதுச்சேரி முன்னாள் அமைச்சா்கள் வழிபாடு

News image

சேலம் சூரமங்கலம் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் பிறந்த நாள் விழாவில், பங்கேற்று தரிசனம் செய்த புதுச்சேரி முன்னாள் அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா்.

Updated On :12 மே 2026, 12:12 am IST

சேலத்தில் ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் புதுச்சேரி முன்னாள் அமைச்சா்கள் நமச்சிவாயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கடந்த 2000-ஆவது ஆண்டு சேலத்தில் ஜீவசமாதி அடைந்தாா். அவருக்கு சேலம் சூரமங்கலத்தில் கோயில் எழுப்பப்பட்டு, நாள்தோறும் பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் 167 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி திங்கள்கிழமை காலை 7.30 மணி முதல் ஞானவிநாயகா், ஞானமுருகா், அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகாஅபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் புதுச்சேரி முன்னாள் அமைச்சா்கள் நமச்சிவாயம், திருமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.