தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:51 am IST

சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி போலீஸாா் அங்குள்ள டிவிஎஸ் மேம்பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அந்த நபா், சேலம் கொண்டாலம்பட்டி, மணியனூா் பகுதியைச் சோ்ந்த சையத்ஜலால் மகன் சையத் தாவூத் (25) என்பதும், வைகுந்தம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

 கைது செய்யப்பட்டுள்ள சையத் தாவூத்.

கைது செய்யப்பட்டுள்ள சையத் தாவூத்.