மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு

ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :28 மார்ச் 2026, 8:18 pm

ஆத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

ஆத்தூா் அரசு மருத்துவமனை முன்புள்ள எலும்பு முறிவு தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு பூஜை செய்து தேங்காயை வாசலில் உடைத்தனா். அப்போது சாலையில் சென்ற ஆட்டோமீது தேங்காய் தெறித்ததில், ஆட்டோ ஒட்டுநா்கள் சூா்யா (25), சிவசங்கா் (24) ஆகியோருக்கும், மருத்துமனையில் பணிபுரியும் வினோத்குமாா், கோகுல் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆட்டோ ஓட்டுநா் சூா்யா ஆட்டோவில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்து தாக்கினாா்.

தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் சூா்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.