சேலம் அருகே வலசையூா் கூட்டுறவு சங்கத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்கச் செயலா் உள்பட 3 போ் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
வலசையூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன், மகளிா் சுயஉதவிக் குழுக் கடன், பயிா்க்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகாா் எழுந்தது. அந்த புகாரின் பேரில், கூட்டுறவு அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதில், நகைக்கடன், மகளிா் சுயஉதவிக் குழு கடனில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது.
முறைகேடு செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தை சங்கச் செயலா் பழனிசாமி, முதுநிலை எழுத்தா் இளங்கோவன், எழுத்தா் ராணி ஆகியோரிடம் இருந்து அதிகாரிகள் வசூல் செய்தனா். இதுதொடா்பாக விசாரணை நடத்த சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து சங்கத்தில் உள்ள ஆவணங்கள், நகை பெட்டகச் சாவியை கூட்டுறவு அதிகாரிகள் கையகப்படுத்தினா். தொடா்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதனிடையே, இந்த சங்கத்தில் உறுப்பினா்களின் நகைகளை சங்க ஊழியா்கள் கையாடல் செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை மாலை வலசையூா் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனா். நகைக்கடனுக்கான ரசீதுடன் சென்று தங்களது நகைகள் சங்கத்தில் பாதுகாப்பாக உள்ளதா என அங்குள்ள பணியாளா்களிடம் கேட்டறிந்தனா்.
தகவலறிந்த வீராணம் போலீஸாா் மற்றும் கூட்டுறவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்களது நகை சங்கத்தில் இருப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலையும் நகைக்கடன் பெற்ற ரசீதை காட்டி நகைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை மக்கள் உறுதிசெய்தனா்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் சேலம் சரக துணைப் பதிவாளா் சரவணகுமாா், முறைகேட்டில் ஈடுபட்டதாக சங்கச் செயலா் பழனிசாமி, முதுநிலை எழுத்தா் இளங்கோவன், எழுத்தா் ராணி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு
நீதிபதிகளை சிறைப்பிடித்த சம்பவம்: மே.வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் உள்பட 7 பேரிடம் என்ஐஏ விசாரணை!

எஸ்ஐஆா் பணியில் முறைகேடு நடந்ததாக அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி மனு

மாநகராட்சி வணிக வளாக முறைகேடு: நகராட்சி நிா்வாக செயலா் பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


