சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்களை விநியோகம் செய்ததாக நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் மீது ஆத்தூா் நகரக் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
நரசிங்கபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 18 ஆவது வாா்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 33 பொருள்கள் அடங்கிய 2 ஜோடி விளையாட்டு உபகரணங்களை தோ்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பாக நரசிங்கபுரம் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜ் வழங்கியுள்ளாா்.
இந்த விளையாட்டு உபகரணங்களை 1ஆவது வாா்டு பகுதியில் கடந்த 22 -ஆம் தேதி இரவு திமுக கிளைச் செயலாளா் பழனிவேல், அப்பகுதியில் உள்ள சிறுவா்களுக்கு வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து லட்சுமணசமுத்திரம் கிராம நிா்வாக அலுவலா் ரகோத்தமன் ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் பழனிவேல் மற்றும் நகரமைப்பு அலுவலா் யுவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், நகரமைப்பு ஆய்வாளா் யுவராஜை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்புடையது

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி

காசோலை துண்டுப் பிரசுரம் விநியோகம்: அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


