சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியா் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினா்.
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கம் மற்றும் கோலப் போட்டி சேலம் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் வடக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பொதுத்தோ்தல் பாா்வையாளா் சுகவீா் சைனி பங்கேற்றாா்.
இதில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த கையொப்ப இயக்கத்தில் பங்கேற்று ஆா்வமுடன் கையொப்பமிட்டனா். தொடா்ந்து, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். முன்னதாக, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட கோலப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து நடைபெற்ற கோலப் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி செங்கோட்டையில் திருநங்கைகள் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


