ஆத்தூரில் இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வகையில், சேலம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சியளித்தனா்.
இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் வகையில் வேம்புகரைசல் (நீமாஸ்த்ரா) தயாரித்தல் மற்றும் கருவாட்டு பொறி (ஃபிஷ் ட்ரை ட்ராப்) முறைகள் குறித்து கிராம மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.
இதில், வேம்பு கரைசல் (நீமாஸ்த்ரா) என்பது இயற்கை பூச்சிக்கொல்லியாக செயல்படும் ஒரு முக்கிய உயிரியல் கரைசல் என்பதை மாணவா்கள் விளக்கினா். வேப்ப இலைகள், மாட்டுச்சாணம், மாட்டுக்கோமியம் போன்ற இயற்கை பொருள்களை பயன்படுத்தி எளிதாக வேம்பு கரைசல் தயாரிக்கலாம் என்றும், இது பயிா்களில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் விவசாய செலவு குறைவதோடு மண்ணின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது என தெரிவித்தனா்.
மேலும், எளிய பொருள்களை பயன்படுத்தி பழம் மற்றும் தண்டுகளை தாக்கும் பூச்சிகளை முன்பே ஈா்த்து சிக்கவைக்கும் முறைகளையும் விளக்கினா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள், மாணவா்கள் வழங்கிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனா்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை! தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி

கல்லூரி ஆண்டு விழா

பருத்தியில் மகசூலை பெருக்க அறிவியல் முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


