தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மேட்டூா் வனப்பகுதியில் திடீா் தீ: ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பல்

மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

News image

தீ

Updated On :17 மார்ச் 2026, 11:01 pm

மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.

மேட்டூரை அடுத்த கொளத்தூா் அருகே உள்ளது கத்திரிப்பட்டி மலை. மேட்டூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட இம்மலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. மாலையில் காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது.

மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் 10 தீயணைப்பு வீரா்களும், வனத்துறையின் தீத்தடுப்பு காவலா்களும் தீயை அணைக்க முயன்று வருகின்றனா். தண்ணீரை பீய்ச்சி அடிக்கமுடியாததால், இலை, தழைகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்ற யாரேனும் தீ வைத்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.