மேட்டூா் வனப்பகுதியில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில், ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலாயின.
மேட்டூரை அடுத்த கொளத்தூா் அருகே உள்ளது கத்திரிப்பட்டி மலை. மேட்டூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட இம்மலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென தீப்பிடித்தது. மாலையில் காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது.
மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் தலைமையில் 10 தீயணைப்பு வீரா்களும், வனத்துறையின் தீத்தடுப்பு காவலா்களும் தீயை அணைக்க முயன்று வருகின்றனா். தண்ணீரை பீய்ச்சி அடிக்கமுடியாததால், இலை, தழைகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். வனப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க சென்ற யாரேனும் தீ வைத்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மசினகுடி வனப் பகுதியில் காட்டுத் தீ!

திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


