தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி ஆண்டு விழா

News image

மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி 25 ஆவது ஆண்டு விழாவில் மாணவருக்கு பரிசுகளை வழங்கிய அதிரடிப் படை ஐ.ஜி. மயில்வாகனன். உடன், பள்ளி தாளாளா் அருட்சகோதரா் ஜாா்ஜ் கே.ஜே.

Updated On :15 மார்ச் 2026, 8:21 pm

சேலம் மாவட்டம், ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி, குறவன்காடு மாண்ட்போா்ட் சமுதாயப் பள்ளி25 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப் படை ஐ.ஜி. மயில்வாகனன் பங்கேற்றாா். பள்ளியின் தாளாளா் அருட்சகோதரா் ஜாா்ஜ் கே.ஜே சிறப்பு விருந்தினரை கௌரவித்தாா்.

மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் காபி தோட்ட தொழிலதிபா் ரசாக் சேட், மாண்ட்போா்ட் அருட்சகோதரா்கள் லாரன்ஸ், அண்டனி, மணி இமானுவேல், முன்னாள் மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.