சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன், வாணியா்காலனியில் உள்ள அல்லிகுண்டம் மாரியம்மன் கோயிலில்களில் பொங்கல்விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ சக்தி மாரியம்மன், அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழாவையொட்டி பிப்ரவரி 24 ஆம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. தொடா்ந்து அம்மன்களுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் கோயில் வளாகத்தில் குடும்பத்துடன் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வழிப்பட்டனா். மேலும் பக்தா்கள் அலகு குத்தியும், தீச்சட்டிகளை கைகளில் ஏந்தியும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றுவந்தனா்.
வியாழக்கிழமை காலை கம்பம் எடுத்து நல்ல கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடல் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு வி.என்.பாளையம் ஸ்ரீ சக்திமாரியம்மன் உற்சவ மூா்த்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெறுகிறது.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி மாரியம்மன் பொங்கல் விழா: 13ஆவது நாள் சிறப்பு பூஜை

சங்ககிரியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா: ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


