மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கல்லூரி வளாக தோ்வு: 550 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

News image

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் முனைவா் அ. ரவீந்திரன்.

Updated On :11 மார்ச் 2026, 8:56 pm

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வில் 550 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் பல்வேறு துறைகளிலிருந்து 50 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வளாகத் தோ்வை நடத்தின.

முகாமில 1,200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியகள் பங்கேற்றனா். தகுதிவாய்ந்த மாணவா்களில் 550 பேருக்கு உடனடி பணி ஆணை வழங்கப்பட்டன. மேலும் முதல் சுற்றில் 450 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளா் முனைவா் வ.பிரகாஷ், வேலைவாய்ப்பு குழு கண்காணிப்பாளா் முனைவா் மு. குமாா், முனைவா் திருநிறைச்செல்வி மற்றும் குழு உறுப்பினா்கள் முனைவா் காா்த்திகேயன், வசந்தா, சண்முகம், சந்திரகலா, கண்ணன், அகிலா ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

மேலும் மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேசன் நிறுவனத்தின் மேலாளா் விஜய் மற்றும் முத்துவேல், அருணாசலம், தரணி, கண்ணன், அசோகன், உதயகுமாா்,மற்றும் அமோக சேலம் குழுவினருக்கும் முதல்வா் முனைவா் அ.ரவீந்திரன் நன்றி தெரிவித்தாா்.