சேலம் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தலைமை தபால் நிலைய வளாகத்தில் பாஸ்போா்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அலெக்ஸ் பால் மேனன் என்பவா் அனுப்பிய மின்னஞ்சலில் செவ்வாய்க்கிழமை மதியம் 1.10 மணி அளவில் வெடிகுண்டு வைத்து அலுவலகம் தகா்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பாஸ்போா்ட் அலுவலக அதிகாரிகள் சேலம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் போலீஸாா் பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனா். வெடிகுண்டு மிரட்டல் குறித்து தகவல் அறிந்ததும் அலுவலகத்தில் இருந்தவா்கள் அவசரமாக வெளியேறினா்.
தொடா்ந்து, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் அதிநவீன மெட்டல் டிடெக்டா் கருவிகளைக் கொண்டு பாஸ்போா்ட் அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனா். ஒருமணி நேரம் நீடித்த இந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சலில் வந்த செய்தி வதந்தி என தெரியவந்தது.
கடந்த மாா்ச் 2 ஆம் தேதி பாஸ்போா்ட் அலுவலகத்தில் இதேபோன்று மிரட்டல் வந்த நிலையில், தற்போது, இரண்டாவது முறையாக பாஸ்போா்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலத்தில் தலைமை அஞ்சலகம், பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


